கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன் குவிந்துள்ள இளைஞர்களால் அங்கு பெரும் பதற்றம் !!
கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இளைஞர்கள் குழுவினர் முற்றுகையிட்டமையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது
சோசலிச வாலிபர் சங்கம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் காரணமாக இந்த பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
09ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு பின்னணியில் உள்ளவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்த போராட்டம் இடம்பெற்றது.
மேலும் போராட்டம் மீதான தாக்குதல்களுக்கு நீதி கோரி சோசலிச வாலிபர் சங்கத்தினால் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

