மேற்பார்வையாளர் ஏசினார்?? யாழ் மாநகரசபை சுகாதாரத்தொழிலாளி தற்கொலை!!
சந்தை மேற்பார்வையாளர் தன்னை தொடர்ந்து ஏசிவருவதாக தனது மனைவியிடம் தெரிவித்த பின் மாநகரசபைத் தொழிலாளி தற்கொலை செய்துள்ளதாக அவரது மனைவி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். நேற்று இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதே வேளை யாழ் மாநகரசபைத் தொழிலாளிகள் இன்று பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
