புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவிலிருந்து யாழ் இளைஞனுக்கு வந்த 3001 கோடி ரூபா!! பெற வந்த 3 பேர் கைது!! நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு வந்த 3,001 கோடி ரூபாவை பெறும் நோக்கத்துடன், இளைஞனின் உறவினர் வீட்டிற்கு சென்று அச்சுறுத்தல் விடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p><div class='ai-viewports ai-viewport-2 ai-viewport-3 ai-insert-10-19809487' style='margin: 8px auto; text-align: center; display: block; clear: both;' data-insertion='prepend' data-selector='.ai-insert-10-19809487' data-insertion-no-dbg data-code='PGRpdiBjbGFzcz0nY29kZS1ibG9jayBjb2RlLWJsb2NrLTEwJyBzdHlsZT0nbWFyZ2luOiA4cHggYXV0bzsgdGV4dC1hbGlnbjogY2VudGVyOyBkaXNwbGF5OiBibG9jazsgY2xlYXI6IGJvdGg7Jz4KPGEgaHJlZj0iaHR0cHM6Ly9jaGF0LndoYXRzYXBwLmNvbS9JQ3RkdkpjeEt4czRxN1pNdzBDN1YyIj4KPGltZyBzcmM9Imh0dHBzOi8vcGFnZXRhbWlsLmNvbS93cC1jb250ZW50L3VwbG9hZHMvMjAyMS8wNC9qb2lud2hhdHNhcHAuanBnIj48L2E+PC9kaXY+Cg==' data-block='10'></div>


<p>தென்னிலங்கையை சேர்ந்த சிங்கள நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>

<p>அரியாலையை சேர்ந்த இளைஞன் ஒருவரின் வங்கிக் கணக்கில் கடந்த வருடம் 3,001 கோடி ரூபா பணம் வைப்பிலிடப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த மத்திய வங்கி, அந்த பணத்தை முடக்கியது. கனடாவில் இணையத்தளம் மூலமாக மோசடி மூலமாக திருடப்பட்ட பணமென அது கருதப்படுகிறது.</p>
<p>அந்த இளைஞன் சிஐடியினரால் கைது செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார். அந்த பணத்திருட்டில் அவர் தொடர்புபட்டதற்கான ஆதாரங்கள் இருக்கவில்லை.</p><div class='code-block code-block-3' style='margin: 8px 0; clear: both;'>


<p>இதையடுத்து, வவுனியாவில் அந்த இளைஞன் தங்கியிருந்த போது, மத்திய வங்கி ஊழியர் என கூறிய ஒருவர் உள்ளிட்ட குழுவினால் அந்த இளைஞன் கடத்தப்பட்டார். எனினும், அவர் தப்பியோடி பொலிசில் சரணடைந்ததை தொடர்ந்து, கடத்தல்காரர்கள் கைதாகினர்.</p>
<p>அதன்பின்னரும், அந்த இளைஞனின் மூலமாக பணத்தை பெற பல தரப்புக்கள் முயன்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இளைஞன் அடையாளம் தெரியாத இடமொன்றில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.</p>
<p>இந்த நிலையில், அரியாலையிலுள்ள இளைஞனின் உறவினர்கள் வீட்டிற்கு நேற்றிரவு சென்ற குழுவொன்று, குடும்பத்தினரை அச்சுறுத்தியுள்ளது.</p>
<p>இளைஞனின் இருப்பிடத்தை கேட்டதுடன், அவரது தொலைபேசி இலக்கத்தையும் கோரியுள்ளனர். சக்திமிக்க அரசியல் செல்வாக்குள்ளவர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், மத்தியவங்கியை சேர்ந்தவர்கள் என வாய்க்கு வந்ததையெல்லாம் அடித்து விட்டுள்ளனர்.</p>
<p>இளைஞன் சம்மதித்தால் பணத்தை உடனடியாக எடுக்கலாம், அவருடன் பேச வேண்டுமென கூறி, இளைஞனின் தொடர்பேற்படுத்துமாறு அச்சுறுத்தியுள்ளனர்.</p>
<p>குடும்பத்தினர் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.</p>