புதினங்களின் சங்கமம்

திருகோணமலையில் ஆட்டோ இடித்து ஒருவர் பலியான சி.சி.ரீ.வி காட்சி (Video)

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட திருகோணமலை புல்மோட்டை என்.சீ வீதி முருகாபுரி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்

இவ்விபத்து நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது

இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் திருகோணமலை சாம்பல்தீவு பிரதேசத்தினை வசிப்பிடமாக கொண்ட தனியார் காப்புறுதி நிறுவனமொன்றில் கடமையாற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையான என்.பிரபாகரன் (58) என திருகோணமலை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்

விபத்து தொடர்பில் தெரியவருவதாவது நேற்று இரவு முருகாபுரி பிரத்தேசத்தில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு செல்வதற்காக பிரதான வீதியினை கடக்க முற்பட்ட வேளையில் பிரதான வீதியில் அதிவேகமாக பயணித்த நடமாடும் வெதுப்பாக முச்சக்கர வண்டி மோதியதில் தலையில் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் விபத்து தொடர்பில் சி.சி.டீ.வி காணொளி பெறப்பட்டுள்ளபட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தலைமையக பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.