பொய்யான தகவல்களைப் பேஸ்புக்கில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!!
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான வகையில் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.
போலியான தகவல்களை பரப்பும் குழுக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.
அவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் தயாராவதாகவும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.