புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் புலம்பெயர்ந்தோருக்கு கிடைத்த அதிர்ஸ்டம்!! மகிழ்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்!! யாழ்ப்பாணத்தில் உள்ள பெற்றோருக்கு நடக்கப் போவது என்ன?

 

புலம்பெயர்ந்தோரின் பெற்றோருக்கு அனுமதி தொடர்பில் ஒரு மகிழ்ச்சியான செய்தி! தமிழர்கள் மகிழ்ச்சி..

இதுவரை இல்லாத வகையில், 2021ஆம் ஆண்டு, 40,000 புலம்பெயர்ந்தோர் தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு வருவதற்கு ஸ்பான்சர் செய்ய அனுமதிக்கப்பட உள்ளார்கள்.

பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகள் திட்டத்தின்படி, (Parents and Grandparents Programme (PGP), ஆண்டுதோறும் 10,000 பேர் தங்கள் பெற்றோரை கனடாவுக்கு வர ஸ்பான்சர் செய்ய அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது முதன்முறையாக கனட அரசு 30,000 கூடுதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளன.

கனடாவைப் பொருத்தவரை, இந்திய கனேடியர்கள் சமூகத்தினர் அதிகரித்துவரும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் அவர்கள்தான் அதிக அளவில் பயன்பெறப்போகிறார்கள்.

இந்த திட்டத்திற்காக, செப்டம்பர் 20 முதல் இரண்டு வாரங்களுக்கு ஒன்லைனில் விண்ணப்பங்கள் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்படுவோர், தங்கள் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகளை கனடாவுக்கு அழைத்துவர அனுமதிக்கப்படுவார்கள் என்பது கனடாவில் புலம்பெயர்ந்தோர்க்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ஆகும்.