Home புதினங்களின் சங்கமம் ஊழல் விவகாரம்; ஒரே அரச திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்!

ஊழல் விவகாரம்; ஒரே அரச திணைக்களத்தின் 600 ஊழியர்களுக்கு இடமாற்றம்!

இலஞ்ச ஊழல் முறைப்பாடுகளையடுத்து மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஊழியர்கள் 600 பேர் உடன் அமுலாகும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர் என்று திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி சுமித் அழககோன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே தொடர்ந்தும் திணைக்கள பணியில் ஈடுபடுவார்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் தொடர்பில் பொது மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளின் பிரகாரம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.