இலங்கை தர்க்கா நகரில் கணனி பொறியியலாளரான ஐ.எஸ் உறுப்பினர் கைது
ஐ.எஸ் .உறுப்பினர் ஒருவர் தர்கா நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அழுத்கம பொலிஸ்
தெரிவித்துள்ளது.
ஆதில் அமீஸ் என்ற 24 வயது இளைஞர் கணனி விற்பன்னரெனவும் இவர் நேரடியாக ஐ .எஸ். –
அமைப்புடன் தொடர்பில் இருந்தாரென்றும் பொலிஸ் சொல்கிறது.
விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கைது
இடம்பெற்றுள்ளது