மண்டைதீவுப் பகுதியில் வயல் காணியில் வெட்டப்பட்டிருந்த கேணி போன்ற குழிக்குள் விழுந்து இரு சகோதரர்கள் உயிரிழந்திருந்தனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் (21.11.2020) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது.
அவர்களின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் மண்டைதீவில் இடம்பெறுகின்றது.
இதில் மண்டைதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சேக்ஸ்பியர் சர்வின் (வயது-07) மற்றும் சேக்ஸ்பியர் பெர்வின் (வயது-05) ஆகிய இரு சகோதரர்களே உயிரிழந்தவர்கள் ஆவார்.







