Uncategorized

வெள்ளவத்தையில் ஒருவருக்கு கொரோனா: தமிழர்களிடையே அச்சம்!

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அங்கு செறிந்துவாழும் தமிழர்களிடையே கொரோனா பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, வெள்ளவத்தையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தை சந்தையை அண்டிய பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி ஒன்றில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெளிநாடு செல்வதற்காக நேற்று பி.சி.ஆர். பரிசோதனை செய்ய முற்பட்ட வேளையே தொற்று அடையாளம் காணப்பட்டது.

இதையடுத்து சுகாதார அதிகாரிகள் அவரை வைத்திய சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர்.

அவரது வீட்டில் உள்ள இருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டவர் இந்தியப் பிரஜை என்று ஒரு தகவல் தெரிவித்தது.