புதினங்களின் சங்கமம்

கனடா பிரதமரும் ஆப்பிரகாம் சுமந்திரனும்! (Photos)

1983 யூலை இனப் படுகொலைகளை ஈழத் தமிழருடன் சேர்ந்து தானும் நினைவு கூர்வதாக கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்ல இவ் இனப்படுகொலைக்குரிய நியாயம் கிடைக்க கனடா தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அவர் தமிழ்மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

ஆனால் சுமந்திரன், இவ் இனப்படுகொலை செய்தவர்களுடன் ஐந்து வயது முதல் சேர்ந்து வாழக்கிடைத்தது தனது பாக்கியம் என்கிறார்.

கனடா பிரதமர் தமிழர் இல்லை. தமிழர் வோட்டில் அவர் பிரதமராகவும் இல்லை. ஆனாலும் அவர் தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்.

ஆனால் சுமந்திரன் ஒரு தமிழர் மட்டுமல்ல தமிழ் மக்களின் வோட்டில் இதுவரை எம்.பி யாக இருந்தவர். இப்போதும் எம்.பி பதவிக்காக வந்திருக்கிறார்.

தமிழ் மக்களே! உங்கள் கையில் இருப்பது வோட்டு அல்ல வேட்டு. முன்னால் நிற்பது சுமந்திரன் மட்டும் அல்ல இனப்படுகொலை செய்த சிஙகளப்படை புடைசூழ நிற்கிறார்.

நன்றி

தோழர்பாலன்