யாழில் இடம்பெற்ற கோர விபத்து! 17 மாடுகள் பலி
யாழ். தென்மராட்சி மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றத்துக்கு அருகாமையில் ரயிலுடன் மோதுண்டு 17 மாடுகள் பலியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டே இந்த மாடுகள் உயிரிழந்துள்ளன.
உயிரிழந்த மாடுகளுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை என சாவகச்சேரி பிரதேச சபையின் வெளிக்கள மேற்பார்வை உத்தியோகத்தர் கைலாயப்பிள்ளை சிவநேசன் தெரிவித்தார்.

