மரத்தில்பரன் அமைத்து தங்கியிருந்த சிறுமி மின்னல் தாக்கி பலி!! (Photos)!!
மின்னல் தாக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்த
சம்பவம் பதுளை, ஹல்துமுல்ல பிரதேச செலயகத்துக்கு உட்பட்ட ஊவா
மாளிகா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாண்டு நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த
மோகன்ராஜ் ருக்ஷி (வயது -10) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மலையகத்தின் பல பகுதிகளிலும் தற்போது மாலை வேளைகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது.<
இவ்வாறு மழை பெய்யும்போது, மரத்தடியில் ஒதுங்கிய போதே மின்னல் தாக்கி
சிறுமி உயிரிழந்துள்ளார் என விசாரணைகளை மேற்கொண்ட கொஸ்லந்த பொலிஸார்
தெரிவித்தனர்.
பாரிய மரத்தின் கீழ்
உள்ள வீட்டிலேயே சிறுமி தனது குடும்பத்தினருடன் வாழந்தார்
உயிரிழந்த சிறுமியின் சடலம் வெல்லவாய வைத்தியசாலையில் பிரேத
பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக கொஸ்லந்த பொலிஸார்
மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுமியின் குடும்பம் வறுமையான நிலையில்
மண்குடிசை ஒன்றிலேயே வாழ்ந்து வருகிறது, மின்சாரம் உட்பட
அடிப்படை வசதிகள் கூட அவர்களுக்கு இல்லை. பாரிய மரம் ஒன்றின் கீழ்தான்
இவர்களின் குடிசை அமைந்துள்ளது.