புதினங்களின் சங்கமம்

கொழும்பில் வேப்பிலைக்கு கடும் கிராக்கி!! ஒரு கீரைப்பிடி அளவான வேப்பிலை 100 ரூபா!!

கொழும்பில் ஒரு பிடி வேப்பம் இலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கொழும்பலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அவற்றை உண்டால் அல்லது பானமாக அருந்திகொண்டால் கொரோனா வராது என்று கூறியே விற்பனை செய்யப்படுகிறது.

கிராண்ட்பாஸ் பகுதிகளில் தான் இந்த விற்பனை இடம்பெறுகிறது.நேற்று முன்தினம் குறித்த வேப்பமிலை கட்டுகள் 50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

இதற்கு பெரும்பான்மை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து நேற்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.