கொரோனா கலக்கம்!! பிரான்ஸ் பாரீசில் குட்டி யாழ்ப்பாணமும் அடங்கிவிட்டது!! (photos)
ஹொரோனாவால் “குட்டியாழ்பாணமும்” வெறிச்சோடியது !!
பிரான்ஸ் தேசத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள ஹொரோனா வைரஸ் காரணமாக குட்டியாழ்பாணம் என செல்லமாக அழைக்கப்படுகின்ற தமிழர் வர்த்தக நிலையங்கள் உள்ள லா – சப்பல் பகுதியும் வெறிச்சோடியது.
அத்தியாவசிய அங்காடிகளைத் தவிர, பிற வர்த்தக நிறுவனங்களக்கு நேற்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு எதிர்வரும் ஏப்ரல் 15ம் திகதி வரை நீடிக்கும் என அரசாங்கத்தின் வர்த்தகமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





