புதினங்களின் சங்கமம்

பேருந்துடன் மோதிய கார் – தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!! (Video)

ஹபரன – பொலன்னறுவை பிரதான வீதியின் 31 வது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருந்து ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்தில், காந்தி திஸாநாயக்க (வயது-56) மற்றும் அவரது 25 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.