புதினங்களின் சங்கமம்

யாழில் வயலுக்குள் ஆடு கட்டச் சென்ற பெண் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணத்தில் வயலில் ஆடு கட்டச்சென்ற குடும்பபெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குடும்பத்தாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் வாதரவத்தை புத்தூரைச்சேர்ந்த செல்வராசா ஈஸ்வரி ( வயது52 ) என்ற 6 பிள்ளைகளின் தாயே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

நேற்றுமுன்தினம் தனது வீட்டில் இருந்து வயலுக்கு ஆடுகட்டச் சென்றுள்ளார்.இரவாகியும் அவர் வீடு திரும்பாததை அடுத்து குடும்பத்தவர்கள் அவரைத் தேடியுள்ளனர்.

இதன்போது வயலுக்கு சென்று பார்த்தபோது அவர் வீழ்ந்து கிடந்துள்ளார்.உடனடியாக அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இறப்பு தொடர்பான மரண விசாரணையை திடீர் இறப்பு மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.