புதினங்களின் சங்கமம்

புலம்பெயர் தமிழனிடம் கோடிக்கணக்கான நிதி மோசடி!! அரசியல்வாதி அருண் தம்பிமுத்து கைது!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு அரசியல்கட்சிகளில் இருந்து தாவித் தாவித் திரிந்த இவர் இறுதியாக ஆனந்தசங்கரியின் தமிழர்விடுதலைக்கூட்டணியின் தலைவராக சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டிருந்தார்.

கொழும்பிலிருந்து சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் அவர் பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.