புதினங்களின் சங்கமம்

யாழில் பெரும் வழிப்பறி!! காணியை விற்றுவிட்டு சென்றவரிடம் வீதியில் வைத்து ஒரு கோடி 5 லட்சத்தை கொள்ளை!!

யாழில் தனது சொந்த காணியை விற்பனை செய்த வெளிநாட்டவர் ஒருவரின் பணமானது கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது காணியை விற்றுவிட்டு அந்தப் பணத்தினை எடுத்துச் சென்றவேளையே இவ்வாறு கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கொள்ளைச்சம்பவமானது நேற்று  இரவு 7 மணி அளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 1 கோடியே 8 இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் மேற்கொண்ட முறைபாட்டுக்கு அமைய மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.