Home புதினங்களின் சங்கமம் நல்லுாரில் இந்த வருடம் தேர்த்திருவிழா வெளிவீதியில் நடைபெறாது!! ஆலய நிர்வாகத்தினர் தகவல்!!

நல்லுாரில் இந்த வருடம் தேர்த்திருவிழா வெளிவீதியில் நடைபெறாது!! ஆலய நிர்வாகத்தினர் தகவல்!!

உலகம் பூராவும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலயத்தில் இம்முறை வருடாந்த உற்சவத்தின் போது தேர் வெளி வீதி உலா வராவது ஆலய நிர்வாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலை தாக்குதலை அடுத்து ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

வெளிவீதியில் தேர் உலா வராத போதிலும், ஆலயத்தில் உள்வீதியில் சிறிய தேர் உலா வரும் என கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நல்லூர் ஆலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வருடாந்த உற்சவத்தின் போது ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு பக்தர்களையும் பரிசோதித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்.

கோயிலின் நான்கு வாசல்களிலும் வைத்து அடையாளட்டை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோயில் வளாகத்தில் வழமை போன்று வியாபார நிலையங்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு அப்பால் அரைகிலோமீற்றர் தூரத்தில் வர்த்தக நிலையங்களை அமைக்க யாழ். மாநகர சபை அனுமதி வழங்கியுள்ளது.

நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தை காண புலம்பெயர் நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான மக்கள் தாயகம் வந்து கந்தனின் அருள் பெற்று செல்கின்றமை வழக்கம். இம்முறை கந்ததின் தேரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் அனைத்து தமிழ் மக்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெளிவீதியில் தேர் ஓடுவதற்கு அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்களும் யாழ்ப்பாணம் மற்றும் வெளியிடங்களில் வாழும் இந்துக்களும் கோயில் நிர்வாகத்துக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என யாழ்ப்பாண மக்கள் கேட்கின்றனர். தயவு செய்து இதனைப் பகிர்ந்து அறிவுறுத்துங்கள்.

இதே வேளை இன்று (18.07.2019) அன்று கோவில் நிர்வாகத்தினரை பலரும் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் வழமையான திருவிழா நடைபெறும் என தெரிவித்துள்ளார்கள்.

நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக
இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்பில் உண்மைக்கு மாறான பல செய்திகள்
பரவிவரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு ஆலய தர்மகந்தாவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா ஓகஸ்ட் 6ஆம் திகதி கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகி தொடர்ந்து 25 தினங்கள் சிறப்பாக இடம்பெறவுள்ளது. அத்துடன், 26ஆவது நாள்
திருக்கல்யாண உற்சவமும் 27ஆம் நாள் வைரவர் உற்சவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.