யாழ் வடமராட்சி ஹாட்லிக் கல்லுாரி பழைய மாணவன் சத்தியன் விபத்தில் பலி!!
யாழ். ஆனையிறவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி சாரையடி பகுதியைச் சேர்ந்த 27 வயதான சத்தியமூர்த்தி சத்தியன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹயஸ் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி சில தினங்களுக்கு முன்னர் இவ்விபத்து நேர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
ஹாட்லி கல்லூரியின் முன்னாள் ஆங்கில இலக்கிய ஆசிரியரும் ஓய்வு பெற்ற உதவி கல்விப் பணிப்பாளருமான(ஆங்கிலம்) திரு. சுந்தரமூர்த்தி ஆசிரியரின் மகன் சத்ஜன் அண்மையில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று தனது ஆன்மாவை நிறுத்தி கொண்டார்.


