புதினங்களின் சங்கமம்

இலங்கை குடிமகன்களுக்கு இன்ப அதிர்ச்சி; சற்றுமுன் வெளிவந்த செய்தி..!

பண்டிகைக்காலத்தில் நாட்டில் மதுபானக்கடைகளை மூட எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென மதுவரி திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். மதுக் கடைகள் கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் இயங்கி வருவதாக தெரிவித்தார்.

மேலும் பண்டிகை காலங்களில் மதுக் கடைகளை மூடுமாறு சில குழுக்கள் ஊடகங்கள் மூலம் கோரிக்கைகளை விடுத்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் முதல் கொரோனா வைரஸ் அலையின் போது காணப்பட்டதைப் போல சட்டவிரோத மதுபான வர்த்தகத்தில் அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

அத்தோடு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குள் மற்றும் ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ள அனைத்து மது கடைகளும் மூடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், பண்டிகை காலங்களில் மதுக் கடைகளை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்று தெரிவித்தார்.பண்டிகை காலங்களில் மது அருந்துவதில் அதிகரிப்பு இருப்பதால், மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதால், மது கடைகளை மூடுமாறு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பண்டிகை காலங்களில் மக்கள் மது அருந்துவதற்காக இடத்திலிருந்து இடத்திற்கு பயணிப்பதால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்ஜே தெரிவித்தார்.

மேலும் தற்போது மதுக்கடைகள் மூடப்படாவிட்டால், மேற்கு மாகாணத்துடன் குறிப்பாக கொழும்புமாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியுடன் தொடர்புடைய ஒரு புதிய கொத்தணி உருவாகலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.இந்த காரணங்களால், பண்டிகை காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து மதுக் கடைகளையும் மூடுமாறு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.