முல்லைத்தீவு பாண்டியன்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான மகேஸ்வரன் நிலந்தினி, ஜேர்மனியில் வாழ்ந்து வந்த முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியைச் சேர்ந்த விவாகரத்தான 39 வயதான தர்மேந்திரன் பவநீதராஜ் என்பவனை திருமணத் தரகர் மூலமாக பெற்றோரின் சம்மதத்துடன் 2022ம் ஆண்டு இலங்கையில் திருமணம் செய்துள்ளார். திருமணம் முடித்து அந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் ஜேர்மனி சென்று பவநீதராஜடன் 3 வருடங்களாக வாழ்க்கை நடாத்தி வந்துள்ளாள். தற்போது நிலந்தினி பிரான்சில் வசிக்கும் நிலந்தினியின் சொந்த இடத்தைச் சேர்ந்த ஜாருசன் என்ற நிலந்தியின் வயதான காவாலி ஒருவனுடன் தலைமறைவாகியுள்ளதாக பவநீதராஜ் ஊடகங்களுக்கு தகவல்கள் அனுப்பியுள்ளார்.
ஜாருசனும் நிலந்தினியும் பாடசாலை பருவத்திலேயே காதலர்கள் எனவும் தனது மாமன் ஊடாக 2021ம் ஆண்டு பிரான்ஸ் வந்த ஜாருசன் விசா இல்லாது இருப்பதாகவும் தெரியவருகின்றது. இதன் காரணமாக திட்டமிட்டே நிலந்தினி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து ஜேர்மன் வந்துள்ளாள் என பவநீதராஜ் தெரிவிக்கின்றார். ஜேர்மனில் கணவருடன் 3 ஆண்டுகள் வாழ்ந்தால் மாத்திரமே மனைவியின் குடும்ப விசா உறுதிப்படுத்தப்பட்டு கணவனைப் பிரிந்து தனிமையில் வசிப்பதற்கும் அனுமதி கொடுப்பார்கள் என்றும் 3 வருடங்களுக்கிடையில் கணவனை விட்டுப் பிரிந்தால் அவள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவாள் என்றும் இவற்றை நன்றாக தெரிந்து வைத்திருந்தே நிலந்தினி தன்னை விட்டுவிட்டு ஜாருசனுடன் தலைமறைவாகியுள்ளதாகவும் கணவன் கூறுகின்றார். தற்போது இவர்கள் இருவரும் ஜேர்மன் ஹாம்பர்க் பகுதியில் வசிப்பதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இவர்கள் தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டு தற்போத விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கணவன் தெரிவிக்கின்றார்.
2013ம் ஆண்டு தான் முதல் மனைவியை கரம்பிடித்ததாகவும் 2017ம் ஆண்டு காலப்பகுதியில் மனைவியுடன் இலங்கைக்கு வந்த போது டெங்கு தொற்று நோய் காரணமாக கொழும்பில் இறந்ததாகவும் கணவன் குறிப்பிடுகின்றார். இறக்கும் போது மனைவி கர்ப்பமாக இருந்ததாகவு் அவர் தெரிவித்துள்ளார். இதே வேளை நிலந்தினி தனது கர்ப்பம் தரிப்பதை பிற்போட்டு வந்துள்ளார். இது தொடர்ாக தான் விசாரித்த போது நிரந்தர விசா கிடைத்தால் குழந்தைப் பேற்றுக்கு வன்னியில் உள்ள அம்மாவை இங்கு அழைக்க முடியும் என கூறி தன்னை ஏமாற்றி வந்ததாகவும் கணவன் கூறுகின்றார்.
அடோந் ஜாருசன் உனது காதல் தெய்வீக்கமானதடா…..






