புதினங்களின் சங்கமம்

யாழில். 05 வயது சிறுவனை கடத்திச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய காவாலிக்கு 19 வருட சிறை

யாழ்ப்பாணத்தில் 05 வயது சிறுவனை அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கிய இளைஞனுக்கு 19 வருட சிறைத்தண்டனை விதித்து , யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் தீர்ப்பளித்துள்ளார்.
அச்சுவேலி பகுதியை சேர்ந்த 05 வயதான சிறுவனை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கவர்ந்து சென்று பாலியல் துன்பறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைதான இளைஞனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது.

வழக்கு தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்ட போது, எதிரியான இளைஞனை குற்றவாளியாக கண்ட மன்று , பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து சிறுவனை கவர்ந்து சென்ற குற்றத்திற்காக 07 வருட சிறைத்தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் தண்ட பணமும் , பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றத்திற்கு 12 வருட சிறைத்தண்டனையும் ,25 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்த மன்று , பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 05 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இழப்பீடு வழங்க தவறின் மேலும் 3 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மன்று தீர்ப்பளித்துள்ளது

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x