காணாமல்போன பதுளை மயக்கவியல் வைத்தியரின் சடலம் காட்டுக்குள் மீட்பு.!! பாறை மேல் சடலம்!! சடலத்திற்கு அருகில் கிடந்தது என்ன? வீடியோ
பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றி வந்த 49 வயதான மயக்கவியல் வைத்தியர் ஒருவரின் சடலம் இன்று (24) காலை மஹியங்கனை, மாபாகட, 17ஆம் கட்டை பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, காருக்கு அருகிலுள்ள புதர் பகுதியில் வைத்தியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலத்திற்கு அருகில் இருந்து சில மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வைத்தியர் நேற்று (23) முதல் காணாமல்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

