Home புதினங்களின் சங்கமம் சற்றுமுன் ஆரையம்பதியில் நடந்த விபத்தில் சின்னக்குட்டி பலி!

சற்றுமுன் ஆரையம்பதியில் நடந்த விபத்தில் சின்னக்குட்டி பலி!

சற்று முன்னர் ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டு கல்முனை சாலையில் ஆரையம்பதியில் வைத்து துவிச்சக்கரவண்டி மீது லொறி ஒன்று மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது

உயிரிழந்தவர் ஆரையம்பதி செல்வாநகர் பகுதியை சேர்ந்த சின்னகுட்டி என்று அழைக்கப்படுபவர் என தெரிவிக்கப்படுகிறது

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்