யாழில் சங்கிலி அறுத்த கொள்ளையனை மடக்கிப் பிடித்த வீரப் பெண்!! Photos
யாழ் பண்ணாகத்தில் வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்த கொள்ளையனை அப் பெண் மடக்கி வீழ்த்தி உதைத்த போது மோட்டார் சைக்கிளையும் விட்டுவிட்டு ஓடத் தொடங்கியுள்ளான் கொள்ளையன். இதனை பார்த்த வீதியால் சென்றவர்கள் அவனைத் துரத்திப் பிடித்து நையப்புடைத்து வட்டுக் கோட்டைப் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். கொள்ளையன் ஓட்டி வந்த பள்சர் 200 மோட்டார் சைக்கிளும் பொதுமக்களால் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.