மட்டக்களப்பில் 17 வயது தமிழ்ச் சிறுவனை பொலிசார் அடித்துக் கொலை செய்தனரா?? (video)
மட்டக்களப்பு இருதயபுரம்( நிக்சன் பேக்கரி பகுதியைச்சேர்ந்த) 17வயது சிறுவன் ஒருவர் மட்டக்களப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்சென்ற நிலையில் பொலிஸ்நிலையத்தில் உயிரிழந்த இளைஞனின் பிரேத
பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
தாயர் கூறும் பரபரப்பு விடயமும் உட்பட முழுமையான வீடியோ கீழே உள்ள லிங்கில் இணைக்கப்பட்டுள்ளது. அழுத்திப் பார்க்கவும்.
https://fb.watch/5Uz3lk-ziu/
அதன்படி, இளைஞன் ஐஸ் போதைப்பொருளை பாவித்தமையினாலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு இருதயபுரத்தை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவர் நேற்றிரவு மட்டக்களப்பு
தலைமையக பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டார்.
அவர் பொலிசாரால் தாக்கப்பட்டு இறந்ததாக உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள்
குற்றம்சாட்டியிருந்தனர்.

