கொரோனா பயத்தில் குடும்பத்தை விட்டு யாழ் வந்த சுவிஸ் தமிழ் குடும்பஸ்தர் விடுதியை விட்டு தப்பி ஓட்டம்!!
இந்தச் செய்தி தொடர்பாக ஏற்கனவே வந்த செய்தியை வாசிப்பதற்கு கீழே உள்ள இணைப்பை அழுத்துங்கள்
https://vampan.net/?cat=31
சுவிஸ்லாந்தில் தனது மனைவி பி்ள்ளைக்கு தடிமன், காய்ச்சல் வந்த காரணத்தால் அது கொரோனாவாக இருக்கும் எனக் கருதி அவர்களை அம்போ என விட்டு விட்டு யாழ்ப்பாணம் வந்து பிரபல ஹோட்டலில் தங்கியிருந்த குடும்பஸ்தர் இணையத்தளங்களில் செய்தி கசிந்த காரணத்தால் ஹோட்டலில் விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த ஹோட்டலில் தங்கி நின்ற அவரை மனைவியின் இளைய சகோதரன் சந்திக்க சென்ற சமயம் குறித்த நபர் ஹோட்டலில் விட்டு இன்று காலை வெளியேறி விட்டதாக ஹோட்டல் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை என மனைவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

