Home புதினங்களின் சங்கமம் 1700 போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு காவாலிகள் கைது!

1700 போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு காவாலிகள் கைது!

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா கோவில்குளம் மற்றும் சமளங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1700 போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்க்கப்பட்டது.

குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தலைமையில் சமந்த (24220), திசாநாயக்க (74209), மிதுசன் (91800), சனத் (25522), சுபுன் (100959) உள்ளடங்கிய பொலிஸ் குழுவினரால் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments