புலம்பெயர் தேசத்தில் அம்பாறை தமிழ் இளைஞன் பிரதீபன் மரணம்!!
இலங்கையின் அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பிரதீபன் விதுர்சன் கத்தாரில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டுக்கு வந்து சில நாட்களே ஆன நிலையில், வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்ற கனவுடன் வந்த இளைஞர், எதிர்பாராத விதமாக உயிரிழந்திருப்பது குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

