யாழில் வங்கிக் கடன் பெறுவதற்காக திருவிளையாடல் காட்டிய பொலிஸ்காரன் கைது!
வல்வெட்டித்துறையில் உள்ள அரச வங்கியொன்றில் 1 மில்லியன் ரூபா கடனாகப் பெறுவதற்கு மோசடியான ஆவணங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் நெல்லியடி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்.
வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர்.
பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் சந்தேகநபர் 10,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 100,000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்