புதினங்களின் சங்கமம்

சற்று முன் இலங்கையில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டது!!

எரிபொருள் விலையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய எரிபொருள் விலை தொடர்பிலான நடைமுறை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் உதய கம்பன் பில இன்று உடகவிலாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் பெற்றோலின் புதிய விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் 157 ரூபாவாகவும்,

ஒக்டேன் 95 பெற்றோல் 184 ரூபாவாகவும், அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒட்டோ டீசல் 111 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 144 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.